நான் அந்த பெண்மணியைக் கொல்வேன் என்று நினைக்கவில்லை. ஒரு சில நொடிகளுக்குள்ளாகவே, அந்த சம்பவம் நிகழ்ந்து விட்டது. கொலை செய்த இடத்திலிருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டர் தள்ளி வந்து விட்டேன். யாருமற்ற இந்த அத்துவானப் பிரதேசத்தில் இலக்கின்றி நடந்து கொண்டிருக்கிறேன். காலுக்கடியில் சருகுகள் சரசரக்கின்றன. பயம், குழப்பம், கோபம், விரக்தி எனப்பல கலவையான உணர்ச்சிகள் மனதுக்குள் வீசியடிக்கிறது.
என்னைத் தேடி யாரேனும் வருவார்களோ? காது மடல்களில் சூடான இரத்தம் ஜிவ்வென்று பாய ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். கோபத்தில் என் கீழுதடு மெலிதாகத் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. யாரும் பின்தொடர்ந்து வரவில்லை. ஆனால் வரக்கூடும். அதற்குள் கண்ணுக்கெட்டாத தொலைவு சென்று விடவேண்டும்.
சத்தியமாக நான் வேண்டுமென்று செய்யவில்லை. எப்போதும் நான் பயணிக்கின்ற பாதையின் குறுக்கே சாலை அமைக்கும் பணிக்காக தடை ஏற்படுத்தப் பட்டிருந்தது சென்ற மூன்று மாதங்களில் நான் ஓரிரு முறை அந்த சாலை வரை சென்று விட்டு, பாதை மாறி வந்து விட்டேனோ என்று குழப்பத்துடன் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால் இன்று கிளம்பும் போது என்னோடு அவளும் வர சம்மதித்தது, நான் அந்தத் தடையைத் தாண்டிச் செல்ல ஒரு முக்கிய காரணம். புதிய இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று, குஷிப்படுத்தி அவளுடன் எனக்குள்ள உறவை இன்றும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் மேலிட்டதே இன்று இந்த கொலை நடக்கக் காரணமாகிவிட்டது.
எங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் பாதி கிராமமும், பாதி நகரமுமாய் இருந்த பகுதிக்குத்தான் நாங்கள் எப்போதும் உணவு தேடிச் செல்வோம். ஒருவகையில் பார்த்தால் நாங்கள் செய்து கொண்டிருப்பது திருட்டுதான். ஒவ்வொரு தடவையுமே நாங்கள் கூட்டமாகத்தான் செல்வோம். அந்தப் பகுதி வாசிகள், எங்கள் காட்டுத்தனமான பலத்தையும், மூர்க்கத் தனத்தையும் கண்டவுடனேயே தலைதெறிக்க ஓடி மறைவார்கள். எங்கள் கொள்ளையை முடித்துவிட்டு நாங்கள் திரும்பும் வரை, அவர்கள் தூரத்தில் நின்று கூச்சலிடுவார்களே தவிர வந்து தாக்குவதற்கெல்லாம் துணிய மாட்டார்கள். அது ஏனோ தெரியவில்லை, அந்த மக்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது எங்கள் கூட்டத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் பகலில் மட்டும் அந்தப் பகுதிகளுக்குள் நுழைவதில்லை. எல்லாமே இரவில்தான். விடிய சற்று நேரமிருக்கும்போதே நாங்கள், எங்கள் இருப்பிடம் திரும்பிவிடுவோம்.
எங்கள் கூட்டத்திலிருக்கும் வயது மூத்தவர்கள், அந்த ஊர் இருக்கும் நிலப்பகுதி எல்லாமே ஒரு காலத்தில் நம்முடையதுதான் என்றும், அந்தப் பகுதியில் இப்போது வசிப்பவர்களின் முன்னோர்கள், நம்மை கொஞ்சம்கூட தயவு தாட்சண்யமின்றி, விரட்டியடித்து விட்டு அந்த நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் நான் பிறந்ததில் இருந்தே இந்த அத்துவானப் பகுதிதான் எங்கள் வசிப்பிடம்.
இன்று நான் செய்த காரியத்திற்கு பின் எங்களை இங்கும் வசிக்க அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். முன்னிரவு வரை பெய்திருந்த மழை, இடைவேளை விட்டு மீண்டும் சடசடக்கத் துவங்கியது. நிச்சயம் மழை வேகம் பிடித்து விட்டால் அவர்கள் எங்களைத் தேடி வர மாட்டார்கள்.
அவளை நான் வேறு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி விட்டிருந்தேன். என்னை விட்டுப் பிரிகையில் மிகவும் பயந்து போயிருந்தாள். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு பிறகும் கூட அவளுக்கு என்னுடன் இருக்கத்தான் விருப்பம். ஆனால் நான் இருந்த குழப்பமான மனநிலையில் அவள் என்னோடு இருப்பது சரியெனப் படவில்லை. அவளைப் போகச் சொல்லி கொஞ்சம் மூர்க்கமாகவே கத்தி விட்டேன். விழியோரத்தில் கண்ணீர் கசிந்த அவள் முகம் இந்தக் குழப்பத்தையும் மீறி மனதைப் பிசைந்தது.
கால்கள் சோர்ந்து போனதால் சற்று உட்கார வேண்டும் போல இருந்தது. என்னை நன்கு மறைத்துக் கொள்ளக் கூடிய இடம் தேடி அமர்ந்தேன். மூச்சிறைப்பும், படபடப்பும் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. காலில் இருந்த ரத்தத் திட்டுகளை மண்ணில் அழுந்தத் துடைத்தேன். சில மணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகள் மனதில் மெல்ல நிழலாடத் துவங்கின.
அவளோடு நான் சென்று கொண்டிருந்தபொழுது சாலை போடுவதற்காக எங்கள் பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடையைத் தாண்டும் போது கூட எதிர்வரும் விபரீதத்தை உணரவில்லை. நடந்து செல்கையில் அவள் உடம்போடு ஏற்பட்ட சின்ன சின்ன உரசல்கள் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.
சாலையில் வழக்கத்திற்கு மாறாக மழையினால் போக்குவரத்து அதிகமாக இருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் போக்குவரத்து அடங்கி, சாலை அமைதியாகி இருக்கும். வாகனங்களின் விளக்கு வெளிச்சமும், ஹாரன் சத்தங்களும் அவளுக்கு வியப்பையும், கலவரத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருந்தன. அவள் விரைவாக சாலையைக் கடந்து சென்று விட விரும்பினாள். இருவரும் நடையை வேகப்படுத்தினோம். வாகனங்களுக்கு இடையே நாங்கள் புகுந்து செல்லும் போது உள்ளிருந்தவர்கள் தலையை வெளியே நீட்டி கூச்சலிட்டார்கள். அவள் பதற்றத்துடன் இன்னும் என்னோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள்.
பாதிக்கு மேல் சாலையைக் கடந்த பின் மழையினால் பார்வை தடுமாறிய ஒரு வாகனஓட்டி மிகவும் அருகில் வந்து ஹாரன் அடித்தபடியே கிரீச்சென ப்ரேக் இட்டு நிறுத்தினான். அவள், அந்த சத்தத்தில் தூக்கி வாரிப் போட்டது போல துள்ளி விழுந்து, எனக்குப் பின்னால் தன்னை பதுக்கிக் கொண்டாள். எனக்கு அந்த வாகனஓட்டியின் மீது கோபம் இருந்தாலும், அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து விடவே விரும்பினேன்.
வேகமாக சாலையைக் கடந்து அருகிலிருந்த குடியிருப்பை ஒட்டியிருக்கும் தோட்டத்திற்குள் சென்று விட வேண்டும் என்பதே எனது குறியாக இருந்தது. இதற்கு முன்பு இந்த kudiruppin வழியாக சென்றதில்லை என்றாலும் கூட அந்த குடியிருப்பை ஒட்டித்தான், தோட்டங்கள் இருக்க வேண்டும். இந்த இரைச்சலை விட்டு விரைவாக விலகிச்செல்ல வேண்டும். தோட்டத்தில் பரவி இருக்கும் இருளும், மழை பெய்கின்ற இந்த குளிர்ந்த சூழ்நிலையும், எங்கள் இருவரின் தனிமையை இன்னும் அழகாக்கும்.
அவளோடு பேச்சுக் கொடுத்து அவளது மிரட்சியை மட்டுப்படுத்தியபடியே குடியிருப்புக்குள் நுழைந்தேன். இன்னும் வாகன ஓட்டிகள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது பின்னால் மெலிதாகக் கேட்டது. மழையினால் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. நான் கொலை செய்த அந்த பெண்மணி மட்டுமே தனது நாயை அழைத்து வந்து குடியிருப்புக்கு முன்பிருந்த வெட்டவெளியை கழிப்பிடமாக்கிக் கொண்டிருந்தாள். நான் குடியிருப்புக்குள் நுழையும் போதே அந்தப் பெண்மணியும், நாயையும் கவனித்திருந்தேன். அவர்களைத் தவிர்த்து விட்டு, தோட்டத்திற்குள் சென்று விடவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
அந்த நாய், அதற்குள் எங்களிருவரையும் கவனித்து குரைக்க ஆரம்பித்தது. அந்த பெண்மணியும் கூட அந்த நேரத்தில் எங்களை எதிர்பார்க்கவில்லை. கையில் இருந்த குடையை எங்களை நோக்கி விசிறியபடி அந்தப் பெண்மணியும் கூச்சலிடத் துவங்கினாள். என்னவள் ஏற்கெனவே மிரண்டிருந்ததால் எனக்குப் பின்னால் பதுங்கினாள்.
இவளை தைரியப்படுத்த வேண்டி, முன்னால் இரண்டடி சென்று நானும் சத்தமிட்டேன். நாய் என்னை நோக்கிப் பாய்ந்தது. பெண்மணி குடையை மடக்கி என்னை நோக்கி வீசினாள். நெட்டித் தள்ளினேன். சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தாள். நாய் என்னை நோக்கி முன்னேறியது. அந்தப் பெண்மணி கூச்சலிட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த மற்றவர்களையும் அழைத்தபடியே, என்னை நோக்கி மறுபடியும் ஓடி வந்தாள்.
அவள் நாயைக் காப்பாற்ற வந்தாளோ, அல்லது என்னைத் தாக்க வந்தாளோ, என்பதை நானறியேன். மழையினால் உண்டாகியிருந்த சேற்றில் அவள் வழுக்கி என் காலருகில் விழுந்தாள். நாயையும், அவளையும் ஒருசேர விரட்ட எத்தனித்த எனது காலும் இடறியது. நாயைக் கொஞ்ச தூரம் துரத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்மணி விழுந்தது, விழுந்தபடியே கிடந்தாள். அருகில் சென்று அசைத்துப் பார்த்தேன். உடம்பு துவண்டு கிடந்தது. செம்மண் சேறு, தலைக்குக் கீழிருந்து வந்துகொண்டிருந்த ரத்தத்தால் இன்னும் சிவப்பாகிக் கொண்டிருந்தது.
மீண்டும், மீண்டும் அசைத்துப் பார்த்தேன். அசையவில்லை. இவள் ஒடுங்கிப்போய் அங்கிருந்த மரத்தின் பின்னால் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நிலையின்றி தவித்தேன். மறுபடியும் அந்த உயிரற்ற உடலை அசைத்துப் பார்த்தேன்.
அந்த நாயின் குரைப்பினாலும், அந்த பெண்மணி போட்ட சத்தத்தினாலும், குடியிருப்புக்குள் இருந்து எட்டிப் பார்த்த மக்கள், எங்களைக் கண்டதும் கூச்சலிட்டபடியே ஓடிவந்தார்கள். எங்களை நோக்கி பட்டாசுகளை வீசியபடியும், தீப்பந்தங்களை ஆட்டியபடியும் நெருங்கி வந்தனர். அதற்குமேல் அந்த இடத்தில் நிற்பது எனக்கு சரியெனத் தோன்றவில்லை. அவளை அழைத்துக்கொண்டு, எங்கள் இருப்பிடமான காடு நோக்கி ஓட ஆரம்பித்தேன். அந்த பகுதிவாசிகள் முன்னிலும் அதிகமான பட்டாசுகளை, எங்களை நோக்கி வீசினார்கள்.
மழை மேலும் வலுத்து சடசடத்த சத்தம் என்னை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. மெல்ல எழுந்தேன். அருகில் இருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து கடைவாயில் அதக்கினேன். மழைநீரோடு இருந்த அந்த கிளை தாகத்திற்கு இதமாக இருந்தது.
ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். யாரும் பின்தொடர்வதாகத் தெரியவில்லை. காட்டின் உட்பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் ஏன் அந்தப் பெண்மணியை கொலை செய்தேன். நடையின் வேகத்தை எனது எண்ணங்கள் மட்டுப்படுத்துவதை என்னால் உணர முடிகிறது. இருப்பினும் நான் விரைவாக அவள் இருக்கின்ற இடத்திற்கு சென்று சேர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இங்கே சொடுக்கவும்.
இம்மாதிரியான மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடைப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நமக்கொன்றும் புதிதில்லை. ஆனால் இன்னொரு முறை இதுபோல நடக்காமலிருக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். நன்றி.
என்னைத் தேடி யாரேனும் வருவார்களோ? காது மடல்களில் சூடான இரத்தம் ஜிவ்வென்று பாய ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். கோபத்தில் என் கீழுதடு மெலிதாகத் துடிப்பதை என்னால் உணர முடிந்தது. யாரும் பின்தொடர்ந்து வரவில்லை. ஆனால் வரக்கூடும். அதற்குள் கண்ணுக்கெட்டாத தொலைவு சென்று விடவேண்டும்.
சத்தியமாக நான் வேண்டுமென்று செய்யவில்லை. எப்போதும் நான் பயணிக்கின்ற பாதையின் குறுக்கே சாலை அமைக்கும் பணிக்காக தடை ஏற்படுத்தப் பட்டிருந்தது சென்ற மூன்று மாதங்களில் நான் ஓரிரு முறை அந்த சாலை வரை சென்று விட்டு, பாதை மாறி வந்து விட்டேனோ என்று குழப்பத்துடன் திரும்பி வந்திருக்கிறேன். ஆனால் இன்று கிளம்பும் போது என்னோடு அவளும் வர சம்மதித்தது, நான் அந்தத் தடையைத் தாண்டிச் செல்ல ஒரு முக்கிய காரணம். புதிய இடங்களுக்கு அவளை அழைத்துச் சென்று, குஷிப்படுத்தி அவளுடன் எனக்குள்ள உறவை இன்றும் ஸ்திரப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று எண்ணம் மேலிட்டதே இன்று இந்த கொலை நடக்கக் காரணமாகிவிட்டது.
எங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் பாதி கிராமமும், பாதி நகரமுமாய் இருந்த பகுதிக்குத்தான் நாங்கள் எப்போதும் உணவு தேடிச் செல்வோம். ஒருவகையில் பார்த்தால் நாங்கள் செய்து கொண்டிருப்பது திருட்டுதான். ஒவ்வொரு தடவையுமே நாங்கள் கூட்டமாகத்தான் செல்வோம். அந்தப் பகுதி வாசிகள், எங்கள் காட்டுத்தனமான பலத்தையும், மூர்க்கத் தனத்தையும் கண்டவுடனேயே தலைதெறிக்க ஓடி மறைவார்கள். எங்கள் கொள்ளையை முடித்துவிட்டு நாங்கள் திரும்பும் வரை, அவர்கள் தூரத்தில் நின்று கூச்சலிடுவார்களே தவிர வந்து தாக்குவதற்கெல்லாம் துணிய மாட்டார்கள். அது ஏனோ தெரியவில்லை, அந்த மக்களால் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்பது எங்கள் கூட்டத்திற்கு நன்கு தெரிந்திருந்தாலும் பகலில் மட்டும் அந்தப் பகுதிகளுக்குள் நுழைவதில்லை. எல்லாமே இரவில்தான். விடிய சற்று நேரமிருக்கும்போதே நாங்கள், எங்கள் இருப்பிடம் திரும்பிவிடுவோம்.
எங்கள் கூட்டத்திலிருக்கும் வயது மூத்தவர்கள், அந்த ஊர் இருக்கும் நிலப்பகுதி எல்லாமே ஒரு காலத்தில் நம்முடையதுதான் என்றும், அந்தப் பகுதியில் இப்போது வசிப்பவர்களின் முன்னோர்கள், நம்மை கொஞ்சம்கூட தயவு தாட்சண்யமின்றி, விரட்டியடித்து விட்டு அந்த நிலப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டார்கள் என்றும் சொல்வதுண்டு. ஆனால் நான் பிறந்ததில் இருந்தே இந்த அத்துவானப் பகுதிதான் எங்கள் வசிப்பிடம்.
இன்று நான் செய்த காரியத்திற்கு பின் எங்களை இங்கும் வசிக்க அனுமதிப்பார்களா என்பது கேள்விக்குறிதான். முன்னிரவு வரை பெய்திருந்த மழை, இடைவேளை விட்டு மீண்டும் சடசடக்கத் துவங்கியது. நிச்சயம் மழை வேகம் பிடித்து விட்டால் அவர்கள் எங்களைத் தேடி வர மாட்டார்கள்.
அவளை நான் வேறு வழியாக எங்கள் இருப்பிடத்திற்கு அனுப்பி விட்டிருந்தேன். என்னை விட்டுப் பிரிகையில் மிகவும் பயந்து போயிருந்தாள். இவ்வளவு பெரிய அசம்பாவிதத்திற்கு பிறகும் கூட அவளுக்கு என்னுடன் இருக்கத்தான் விருப்பம். ஆனால் நான் இருந்த குழப்பமான மனநிலையில் அவள் என்னோடு இருப்பது சரியெனப் படவில்லை. அவளைப் போகச் சொல்லி கொஞ்சம் மூர்க்கமாகவே கத்தி விட்டேன். விழியோரத்தில் கண்ணீர் கசிந்த அவள் முகம் இந்தக் குழப்பத்தையும் மீறி மனதைப் பிசைந்தது.
கால்கள் சோர்ந்து போனதால் சற்று உட்கார வேண்டும் போல இருந்தது. என்னை நன்கு மறைத்துக் கொள்ளக் கூடிய இடம் தேடி அமர்ந்தேன். மூச்சிறைப்பும், படபடப்பும் கொஞ்சம் குறைந்தது போலிருந்தது. காலில் இருந்த ரத்தத் திட்டுகளை மண்ணில் அழுந்தத் துடைத்தேன். சில மணி நேரத்திற்குள் நடந்து முடிந்துவிட்ட நிகழ்ச்சிகள் மனதில் மெல்ல நிழலாடத் துவங்கின.
அவளோடு நான் சென்று கொண்டிருந்தபொழுது சாலை போடுவதற்காக எங்கள் பாதையின் குறுக்கே போடப்பட்டிருந்த தடையைத் தாண்டும் போது கூட எதிர்வரும் விபரீதத்தை உணரவில்லை. நடந்து செல்கையில் அவள் உடம்போடு ஏற்பட்ட சின்ன சின்ன உரசல்கள் என்னை வேறெதைப் பற்றியும் சிந்திக்க விடவில்லை.
சாலையில் வழக்கத்திற்கு மாறாக மழையினால் போக்குவரத்து அதிகமாக இருந்தது. வழக்கமாக அந்த நேரத்தில் போக்குவரத்து அடங்கி, சாலை அமைதியாகி இருக்கும். வாகனங்களின் விளக்கு வெளிச்சமும், ஹாரன் சத்தங்களும் அவளுக்கு வியப்பையும், கலவரத்தையும் ஒரு சேர ஏற்படுத்தியிருந்தன. அவள் விரைவாக சாலையைக் கடந்து சென்று விட விரும்பினாள். இருவரும் நடையை வேகப்படுத்தினோம். வாகனங்களுக்கு இடையே நாங்கள் புகுந்து செல்லும் போது உள்ளிருந்தவர்கள் தலையை வெளியே நீட்டி கூச்சலிட்டார்கள். அவள் பதற்றத்துடன் இன்னும் என்னோடு நெருக்கமாக ஒட்டிக் கொண்டாள்.
பாதிக்கு மேல் சாலையைக் கடந்த பின் மழையினால் பார்வை தடுமாறிய ஒரு வாகனஓட்டி மிகவும் அருகில் வந்து ஹாரன் அடித்தபடியே கிரீச்சென ப்ரேக் இட்டு நிறுத்தினான். அவள், அந்த சத்தத்தில் தூக்கி வாரிப் போட்டது போல துள்ளி விழுந்து, எனக்குப் பின்னால் தன்னை பதுக்கிக் கொண்டாள். எனக்கு அந்த வாகனஓட்டியின் மீது கோபம் இருந்தாலும், அப்போதைக்கு அந்த இடத்தை விட்டு வேகமாக கடந்து விடவே விரும்பினேன்.
வேகமாக சாலையைக் கடந்து அருகிலிருந்த குடியிருப்பை ஒட்டியிருக்கும் தோட்டத்திற்குள் சென்று விட வேண்டும் என்பதே எனது குறியாக இருந்தது. இதற்கு முன்பு இந்த kudiruppin வழியாக சென்றதில்லை என்றாலும் கூட அந்த குடியிருப்பை ஒட்டித்தான், தோட்டங்கள் இருக்க வேண்டும். இந்த இரைச்சலை விட்டு விரைவாக விலகிச்செல்ல வேண்டும். தோட்டத்தில் பரவி இருக்கும் இருளும், மழை பெய்கின்ற இந்த குளிர்ந்த சூழ்நிலையும், எங்கள் இருவரின் தனிமையை இன்னும் அழகாக்கும்.
அவளோடு பேச்சுக் கொடுத்து அவளது மிரட்சியை மட்டுப்படுத்தியபடியே குடியிருப்புக்குள் நுழைந்தேன். இன்னும் வாகன ஓட்டிகள் கூச்சலிட்டுக் கொண்டிருப்பது பின்னால் மெலிதாகக் கேட்டது. மழையினால் குடியிருப்புப் பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லை. நான் கொலை செய்த அந்த பெண்மணி மட்டுமே தனது நாயை அழைத்து வந்து குடியிருப்புக்கு முன்பிருந்த வெட்டவெளியை கழிப்பிடமாக்கிக் கொண்டிருந்தாள். நான் குடியிருப்புக்குள் நுழையும் போதே அந்தப் பெண்மணியும், நாயையும் கவனித்திருந்தேன். அவர்களைத் தவிர்த்து விட்டு, தோட்டத்திற்குள் சென்று விடவேண்டும் என்பதுதான் என் எண்ணமாக இருந்தது.
அந்த நாய், அதற்குள் எங்களிருவரையும் கவனித்து குரைக்க ஆரம்பித்தது. அந்த பெண்மணியும் கூட அந்த நேரத்தில் எங்களை எதிர்பார்க்கவில்லை. கையில் இருந்த குடையை எங்களை நோக்கி விசிறியபடி அந்தப் பெண்மணியும் கூச்சலிடத் துவங்கினாள். என்னவள் ஏற்கெனவே மிரண்டிருந்ததால் எனக்குப் பின்னால் பதுங்கினாள்.
இவளை தைரியப்படுத்த வேண்டி, முன்னால் இரண்டடி சென்று நானும் சத்தமிட்டேன். நாய் என்னை நோக்கிப் பாய்ந்தது. பெண்மணி குடையை மடக்கி என்னை நோக்கி வீசினாள். நெட்டித் தள்ளினேன். சில அடிகள் தள்ளிப் போய் விழுந்தாள். நாய் என்னை நோக்கி முன்னேறியது. அந்தப் பெண்மணி கூச்சலிட்டு அந்தக் குடியிருப்பில் இருந்த மற்றவர்களையும் அழைத்தபடியே, என்னை நோக்கி மறுபடியும் ஓடி வந்தாள்.
அவள் நாயைக் காப்பாற்ற வந்தாளோ, அல்லது என்னைத் தாக்க வந்தாளோ, என்பதை நானறியேன். மழையினால் உண்டாகியிருந்த சேற்றில் அவள் வழுக்கி என் காலருகில் விழுந்தாள். நாயையும், அவளையும் ஒருசேர விரட்ட எத்தனித்த எனது காலும் இடறியது. நாயைக் கொஞ்ச தூரம் துரத்திவிட்டு திரும்பிப் பார்த்தேன். அந்தப் பெண்மணி விழுந்தது, விழுந்தபடியே கிடந்தாள். அருகில் சென்று அசைத்துப் பார்த்தேன். உடம்பு துவண்டு கிடந்தது. செம்மண் சேறு, தலைக்குக் கீழிருந்து வந்துகொண்டிருந்த ரத்தத்தால் இன்னும் சிவப்பாகிக் கொண்டிருந்தது.
மீண்டும், மீண்டும் அசைத்துப் பார்த்தேன். அசையவில்லை. இவள் ஒடுங்கிப்போய் அங்கிருந்த மரத்தின் பின்னால் தன்னை ஒளித்துக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. நிலையின்றி தவித்தேன். மறுபடியும் அந்த உயிரற்ற உடலை அசைத்துப் பார்த்தேன்.
அந்த நாயின் குரைப்பினாலும், அந்த பெண்மணி போட்ட சத்தத்தினாலும், குடியிருப்புக்குள் இருந்து எட்டிப் பார்த்த மக்கள், எங்களைக் கண்டதும் கூச்சலிட்டபடியே ஓடிவந்தார்கள். எங்களை நோக்கி பட்டாசுகளை வீசியபடியும், தீப்பந்தங்களை ஆட்டியபடியும் நெருங்கி வந்தனர். அதற்குமேல் அந்த இடத்தில் நிற்பது எனக்கு சரியெனத் தோன்றவில்லை. அவளை அழைத்துக்கொண்டு, எங்கள் இருப்பிடமான காடு நோக்கி ஓட ஆரம்பித்தேன். அந்த பகுதிவாசிகள் முன்னிலும் அதிகமான பட்டாசுகளை, எங்களை நோக்கி வீசினார்கள்.
மழை மேலும் வலுத்து சடசடத்த சத்தம் என்னை சுயநினைவுக்குக் கொண்டு வந்தது. மெல்ல எழுந்தேன். அருகில் இருந்த மரக்கிளை ஒன்றை ஒடித்து கடைவாயில் அதக்கினேன். மழைநீரோடு இருந்த அந்த கிளை தாகத்திற்கு இதமாக இருந்தது.
ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டேன். யாரும் பின்தொடர்வதாகத் தெரியவில்லை. காட்டின் உட்பகுதி நோக்கி நடக்க ஆரம்பித்தேன். நான் ஏன் அந்தப் பெண்மணியை கொலை செய்தேன். நடையின் வேகத்தை எனது எண்ணங்கள் மட்டுப்படுத்துவதை என்னால் உணர முடிகிறது. இருப்பினும் நான் விரைவாக அவள் இருக்கின்ற இடத்திற்கு சென்று சேர வேண்டும்.
சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதை எழுதப்பட்டுள்ளது. இந்த கதையின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு இங்கே சொடுக்கவும்.
இம்மாதிரியான மனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடைப்பட்ட விரும்பத்தகாத சம்பவங்கள் நமக்கொன்றும் புதிதில்லை. ஆனால் இன்னொரு முறை இதுபோல நடக்காமலிருக்க நாம் என்ன செய்யப்போகிறோம்? உங்கள் கருத்துக்களை தவறாமல் பதிவு செய்யுங்கள். நன்றி.
