அக் 17 காலை ஐந்தரை மணி.
கோவையிலிருந்து ஊட்டி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில், தொடர்ந்து ஒரு வாரமாக விட்டுவிட்டுப் பெய்த மழையில், சாலையெல்லாம் குட்டையாக மாறிப் போயிருந்தது. இருட்டினுள் தவறித் தண்ணீரில் கால் வைத்து விடக்கூடாது என்ற எண்ணத்துடனும் கையில் பையுடனும் நின்று கொண்டிருந்தேன். (ஏன்..?! கால் வச்சா என்னவா..?? ஜன்னி வந்திருக்கும்பா..)
சென்னையிலிருந்து ரயிலில் வரும் என் நண்பர்(கள்) கோவையிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் என்னை பிக்-அப் செய்து கொள்வதாகத் திட்டம்.
எனது நண்பர் ஞானா (முழுப்பெயர்: ஸ்ரீ ஞான வித்ய பிரகாஷ் :- பேருதான் நீளமா இருக்கு. ஆனா, ஆள் அகலமா இருப்பாரு.), அவரது அலுவலக நண்பர்களுடன் டவேரா-வில் வந்து என்னை அந்த இருட்டிலும் கண்டுபிடித்து இறங்கினார். "ஞானா" என்னை அவரது நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய, இருட்டில் முகம் தெரியாமலே கை குலுக்கிக் கொண்டேன்.
எங்களது மூன்று நாள் "ட்ரக்கிங்" பயணம் துவங்கியது.
பயணத்திட்டம் இதுதான். முதல் இரண்டு நாட்கள் முதுமலை "அபியாரன்யம்" விடுதியில் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஊட்டி வந்து அங்கிருந்து "வெஸ்டர்ன் காட்ச்மென்ட்" செல்வது.
ஆச்சா..? அங்கங்கே நின்னு தம் அடிச்சு, டீ குடிச்சு, டிபன் சாப்பிட்டு, வெட்டிக் கதை பேசி, பேசிச் சிரிக்கறதை போட்டோ எடுத்துகிட்டு ஒருவழியா மதியம் ஒரு மணி போல வந்து சேர்ந்தோம். ஆங்.. மறந்துட்டேன் பாருங்க.. வர்ற வழியில "கல்லட்டி"க்கும், "மசினகுடி"க்கும் நடுவுல ஒரு அழகான புள்ளிமான் கூட்டத்தை பார்த்தோம்.

கிருஷ்ணன்னு ஒருத்தர். முதுமலை "அபியாரன்யம்" விடுதி அவரு பொறுப்புலதான் இருக்கு. சமையல், காவல், இன்சார்ஜ்ன்னு எல்லாமே அவர்தான். மதியம் வந்து சேர்ந்த உடனே சாப்பாடு மெனு சொல்லிட்டோம். அப்புறம் அதுதானே முக்கியம் . மட்டன் குழம்பும், சில்லி சிக்கனுமா விருந்து சாப்பாட முடிச்சுட்டு...(கொஞ்சம் இருங்க..மூச்சு விட்டுக்கறேன்) பொது விவகாரம், காட்டுக்குள்ளே அவனவனுக்கு கிடைச்ச அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சோம்.
யோவ்..?! தலைப்புல ஏதோ டிரக்கிங் அனுபவம்னு போட்டிருந்தே..?!! இப்போ சோறு தின்ன கதைய சொல்லிக்கிட்டுருக்கே.. ன்னுதானே நெனைக்கறிங்க.. இருங்க.. மேட்டர் (சிறுத்தை) வருது.
சென்னையிலிருந்து ரயிலில் வரும் என் நண்பர்(கள்) கோவையிலிருந்து ஊட்டி செல்லும் வழியில் என்னை பிக்-அப் செய்து கொள்வதாகத் திட்டம்.
எனது நண்பர் ஞானா (முழுப்பெயர்: ஸ்ரீ ஞான வித்ய பிரகாஷ் :- பேருதான் நீளமா இருக்கு. ஆனா, ஆள் அகலமா இருப்பாரு.), அவரது அலுவலக நண்பர்களுடன் டவேரா-வில் வந்து என்னை அந்த இருட்டிலும் கண்டுபிடித்து இறங்கினார். "ஞானா" என்னை அவரது நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய, இருட்டில் முகம் தெரியாமலே கை குலுக்கிக் கொண்டேன்.
எங்களது மூன்று நாள் "ட்ரக்கிங்" பயணம் துவங்கியது.
பயணத்திட்டம் இதுதான். முதல் இரண்டு நாட்கள் முதுமலை "அபியாரன்யம்" விடுதியில் தங்கிவிட்டு மூன்றாவது நாள் ஊட்டி வந்து அங்கிருந்து "வெஸ்டர்ன் காட்ச்மென்ட்" செல்வது.
ஆச்சா..? அங்கங்கே நின்னு தம் அடிச்சு, டீ குடிச்சு, டிபன் சாப்பிட்டு, வெட்டிக் கதை பேசி, பேசிச் சிரிக்கறதை போட்டோ எடுத்துகிட்டு ஒருவழியா மதியம் ஒரு மணி போல வந்து சேர்ந்தோம். ஆங்.. மறந்துட்டேன் பாருங்க.. வர்ற வழியில "கல்லட்டி"க்கும், "மசினகுடி"க்கும் நடுவுல ஒரு அழகான புள்ளிமான் கூட்டத்தை பார்த்தோம்.

கிருஷ்ணன்னு ஒருத்தர். முதுமலை "அபியாரன்யம்" விடுதி அவரு பொறுப்புலதான் இருக்கு. சமையல், காவல், இன்சார்ஜ்ன்னு எல்லாமே அவர்தான். மதியம் வந்து சேர்ந்த உடனே சாப்பாடு மெனு சொல்லிட்டோம். அப்புறம் அதுதானே முக்கியம் . மட்டன் குழம்பும், சில்லி சிக்கனுமா விருந்து சாப்பாட முடிச்சுட்டு...(கொஞ்சம் இருங்க..மூச்சு விட்டுக்கறேன்) பொது விவகாரம், காட்டுக்குள்ளே அவனவனுக்கு கிடைச்ச அனுபவம் பத்தி பேச ஆரம்பிச்சோம்.
யோவ்..?! தலைப்புல ஏதோ டிரக்கிங் அனுபவம்னு போட்டிருந்தே..?!! இப்போ சோறு தின்ன கதைய சொல்லிக்கிட்டுருக்கே.. ன்னுதானே நெனைக்கறிங்க.. இருங்க.. மேட்டர் (சிறுத்தை) வருது.
Chirutha varave illa pola kadasi varaikuk
பதிலளிநீக்குசிறுத்தை மூன்று நாள் கழித்து வருது எல்லாரும் வெயிட் பண்ணுங்க
பதிலளிநீக்கு